Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தரிசனத்துக்காக சேலம் வந்த ஷீரடி ... பிராமணர் சங்கத்தின் இலவச உபநயனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
277 கோவில்களுக்கு ரூ.2.50 கோடி வைப்பு நிதி: மாவட்டத்தில் ஒரு கால பூஜைக்கு அரசு ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
03:06

நாமக்கல்: ”மாவட்டத்தில், 277 கோவில்களுக்கு, 2.50 கோடி ரூபாய் வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு, ஒரு கால பூஜை நடக்கிறது,” என, அமைச்சர் தங்கமணி பேசினார். நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சிறு கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி பூஜை உபகரணங்கள் வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில், ஒரு கால பூஜை நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அத்திட்டத்தை சீரமைத்து, 11 ஆயிரத்து, 900க்கும் மேற்பட்ட கிராமப்புற கோவில்கள் பயனடைந்து வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதி மற்றும் கிராமப்புற கோவில்களில், 10 ஆயிரம் சிறிய கோவில்களுக்கு, உபகரணங்கள் வழங்க, 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 2015 - 16ம் நிதியாண்டில், 340 திருக்கோவில்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், 277 கோவில்களுக்கு, 2.50 கோடி ரூபாய் வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு, ஒரு கால பூஜை நடக்கிறது. தற்போது, 370 சிறு கோவில்களுக்கு, 9.25 லட்சம் ரூபாய் மதிப்பில், பூஜை உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் சரோஜா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி உள்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar