பழநி; பழநி முருகன் கோயில் உண்டியலில், 20 நாட்களில் ரூ. ஒரு கோடியே 55 லட்சத்து 4ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் தங்கம்-1035 கிராம், வெள்ளி- 8,380 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்-1999, ரொக்கம் ரூ. ஒரு கோடியே 55லட்சத்து 4 ஆயிரத்து 869 கிடைத்துள்ளது. இணை ஆணையர் செல்வராஜ், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், கோயில் பணியாளர்கள், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.