திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல அபிஷேகங்கள் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு தீப, ஆராதனைகளும், காளை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.