தொடர் விடுமுறை: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2017 11:06
தேவிபட்டினம்: தொடர் விடுமுறை என்பதால் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. தேவிபட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவபாஷாணம் அமைந்துள்ளது. இங்கு திருமண தடை, ஏவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. மேலும் இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்து வருவதாக பக்தர்கள் நம்புவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக கடும் வெயிலால் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் வெப்பம் தணிந்துள்ளதுடன், கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்து கூட்டம் கூட்டமாக நவகிரகங்களை சுற்றிவந்து தரிசனம் செய்தனர்.