Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் நிறைவுபெற்றது ஆடி ... பழநியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தயாராகும் சிலைகள் பழநியில் விநாயகர் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் பழமையான தெப்பக்குளம் புனரமைப்பு
எழுத்தின் அளவு:
அழகர்கோவிலில் பழமையான தெப்பக்குளம் புனரமைப்பு

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2017
11:07

அழகர்கோவில்: மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் சிதிலமடைந்திருந்த பழமையான தெப்பக்குளம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது. அங்கு நிரந்தரமாக தண்ணீர் தேக்க ஏற்பாடுகள் நடக்கிறது.அழகர்கோவில் கள்ளழகர் கோவில் பழமையும், புராதான சிறப்பும் மிக்கது. கள்ளழகர் கோயில் கருப்பண சுவாமி கோயில் முன்பு பழமையான தெப்பக்குளம், கோட்டைச்சுவர் சிதிலமடைந்திருந்தது. அதை புனரமைக்க 2015ல் கோயில் நிர்வாகம் சார்பில் திட்டம் வகுக்கப்பட்டது. தக்கார் வி.ஆர்.வெங்கடாஜலம் முயற்சியில் முதற்கட்டமாக கோயிலின் பழமையான கோட்டைச்சுவர் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. கோயில் வளாகம் முழுவதும் மரங்கள் நட்டு பராமரிக்கவும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள தனியார் மூலம் நடவடிக்கை எடுத்தனர். அடுத்ததாக சிதிலமடைந்த தெப்பக்குளம் சீரமைப்பு பணி பல லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த 2016 ல் துவங்கி பணிகள் நிறைவடைந்துள்ளன.

தண்ணீர் தேக்க முடிவு
: அழகர்கோவில் மலையில் வற்றாத சுனை ஊற்றான நுாபுர கங்கை தீர்த்தம் மற்றும் மழைக்காலங்களில் மலைகளில் ஏற்படும் சிற்றோடைகளின் தண்ணீரை வீணாக்காமல் நேரடியாக தெப்பக்குளத்திற்கு திருப்பி விட்டு நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இப்பணிகள் செயல் அலுவலர் மாரிமுத்து மேற்பார்வையில் விரைவில் துவங்கவுள்ளது. தெப்பக்குளத்தின் உபரி நீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்தவும், சோலைமலை மண்டபம் முருகன் கோயில், நுாபுர கங்கை தீர்த்தம், மலை பாதைகளில் குரங்குகள், வன விலங்குகள் பயன்பெறும் வகையில் சிறிய நீர் தொட்டிகள் வைத்து தண்ணீர் வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது. அடுத்ததாக பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம் சீரமைக்கும் ஏற்பாடுகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar