பதிவு செய்த நாள்
25
ஜூலை
2017
11:07
பழநி:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்துமுன்னணி சார்பில் 150 சிலைகள் விழுப்புரத்திலிருந்து பழநிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆக.,25ல் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்துமுன்னணி சார்பில் பழநி, ஆயக்குடி, சத்திரப்பட்டி, மானுார், கீரனுார் பகுதிகளில் வைத்து ஊர்வலம் நடத்த உள்ளனர். இதற்கு தேவையான சிலைகள் விழுப்புரத்தில் வைத்து பேப்பர் கூழ், கிழங்கு மாவில் தயாரித்து, சிலைகளின் பாகங்களை தனித்தனியாக பழநிக்கு கொண்டு வந்துள்ளனர். இச்சிலைகள் சின்னகலையபுத்துாரில் வைத்து உறுப்புகள் இணைக்கப்பட்டு வர்ணம்பூசும் பணி நடக்கிறது. 3 அடி முதல் 12 அடிவரையான சிம்மம், நாகம், மயில், மான், மூஞ்சூறு, டிரம்ஸ் செட் உள்ளிட்டவற்றில் விநாயகர் அமர்ந்துள்ள சிலைகள் வந்துள்ளன. இவற்றை விநாயகர் சதுர்த்தியன்று பழநிநகர், ஒன்றிய பகுதிகளில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, பாதவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்வர். பின், சண்முகநதியில் கரைக்க உள்ளதாக, இந்துமுன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன் தெரிவித்தார்.