நத்தம், நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு 21 வகை பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு வளையல், சட்டைத்துணி, குங்குமச் சிமிழ், மஞ்சள் கயிறு உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.