திருவாடானை: பெருமாள் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில் கும்பாபிேஷகம் கடந்த ஜூன் 14ல் நடந்தது.தினமும் உந்திபூத்தபெருமாள், ஸ்ரீதேவி, பூ தேவி தாயார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த மணடலபூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு கோயில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.