ஊராளிபட்டி பெரியகருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2026 10:03
நத்தம்; நத்தம் அருகே ஊராளிபட்டி பெரியகருப்புசாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி முன்னதாக திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர்கோயில்மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து தீர்த்த குடங்கள் கொண்டுவரப்பட்டது. நேற்று முன்தினம் முளைப்பாரி மற்றும் தீர்த்த அழைப்பு நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக ஹோமம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று 2ம் கால யாகசாலை பூஜைகளுக்கு பின் தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கோயில் கலசங்களில் ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தனர்.அன்னதானம் வழங்கபட்டது.