பதிவு செய்த நாள்
02
ஆக
2017
01:08
ஊத்துக்கோட்டை : பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. ஊத்துக்கோட்டை அடுத்த நாகலாபுரம் மண்டலம், திருப்புராந்தகபுரபாளையம் கிராமத்தில் உள்ளது, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன், இக்கோவிலில் நடந்த திருப்பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, இன்று கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜை, ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு கலச பூஜை, ஹோமம், இரவு, 10:00 மணிக்கு, விக்ரஹ பிரதிஷ்டை நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று காலை, 9:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதி முடிந்து, 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராமவாசிகள் செய்கின்றனர்.