Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன அன்னை ஓர் ஆலயம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யார் அந்த சிறுவன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
04:08

அன்று காஞ்சிப் பெரியவரின் பிறந்த தினம். கலவை கிராமத்தில் முகாமிட்டிருந்தார். பக்தர்கள் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

கூட்டத்தினர் ஒரு தம்பதியைப் பார்த்து கொண்டிருந்தனர். அவர் ஒரு தொழிலதிபர். அவரது மோதிரங்களிலும், மனைவியின் கழுத்து நகைகளிலும் செல்வச் செழிப்பு வெளிப்பட்டது. அவர் கூட்டத்தினரை லட்சியம் செய்யாமல், பெரியவரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். பெரியவர் அறையிலிருந்து வந்ததும் தொழிலதிபரிடம், எப்படி இருக்கிறாய்? என விசாரித்தார். அதுதான் சாக்கு என அந்தத் தொழிலதிபர் எல்லோரும் கேட்கும்படியாகத் தான் செய்யும் தர்மங்களை விலாவாரியாக ஒப்பித்தார். அன்ன தானம், பள்ளி,
கோயில்களுக்கு நன்கொடை, ஏழைப் பெண்களுக்கு செய்து வைக்கும் திருமணம் என ஒன்றை விடவில்லை. வலது கை கொடுப்பது இடது கைக்கு மட்டுமல்ல...

எல்லோருக்குமே தெரிய வேண்டும் என்று அவர் நினைப்பதாய்த் தோன்றியது. அவர் முடிக்கும் வரை காத்திருந்த சுவாமிகள், மெல்லிய குரலில் அவருக்கு மட்டுமே கேட்கும்படி திருநெல்வேலியில் இருந்தானே தட்சிணாமூர்த்தி என்ற சிறுவன் அவன் எப்படி இருக்கிறான்? என்று மட்டும் கேட்டு விட்டு, வேறு எதுவும் பேசாமல் கையுயர்த்தி எல்லோரையும் ஆசிர்வதித்து விட்டு சென்றுவிட்டார். உடனே தொழிலதிபர், நான் பாவி, நான் பாவி! என்று சொல்லிக் கொண்டே இருந்தார். பிறகு விசாரித்ததில் தெரிந்த விஷயம் இது தான்.  அவருக்கு ஓர் அக்கா உண்டு. கணவனை இழந்தவர். அந்த அம்மையாருக்கு ஒரு பையன். அவர்கள் இருவரும் அவர் வீட்டில்தான் இருந்தார்கள். திடீரென ஒருநாள் அக்கா காலமானார். அக்காவின்  மகனை ஆதரிக்க மனமில்லாமல் விரட்டிவிட்டார். அது நடந்து சில ஆண்டுகளாகி விட்டது. அந்த அக்கா பையனின் பெயர் தான் தட்சிணாமூர்த்தி. அக்கா மகனை ஆதரிக்கத் துப்பில்லாமல், தான தர்மம் செய்து என்ன பயன்? என்பதே சுவாமிகள் மறைமுகமாய்க் கேட்ட கேள்வி. தொழிலதிபர் அதன்பின் தன் அக்கா மகனை கண்டுபிடித்து  நல்ல முறையில் வளர்த்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லையே!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  * கார்த்திகை தீபத்தன்று ... மேலும்
 

சூரியனை சுட்டவர் டிசம்பர் 03,2025

திருவண்ணாமலையை வலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் ... மேலும்
 

சிவனும் முருகனே டிசம்பர் 03,2025

யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிய முடியாத பரம்பொருள் சிவபெருமான். ஆனால் பக்தர்கள் ... மேலும்
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், ... மேலும்
 
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திரச்சோழன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar