பதிவு செய்த நாள்
16
ஆக
2017
12:08
கிருஷ்ணகிரி: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் மாங்கனி மலை மீது வேல்முருகன் வள்ளி தேவசேனா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிகிருத்திகை விழா, கடந்த, 11ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவி முருகர் கோவிலில், 72வது ஆண்டு ஆடிகிருத்திகை திருவிழா நடந்தது. நேற்று மாலை, ஜெகதேவியை சேர்ந்த முருகன், 46, அருண்குமார், 30,
ராமன், 35 ஆகிய, மூன்று பக்தர்களின் மார்பின் மேல் குந்தானி வைத்து, அதில் மஞ்சளை
கொட்டி உலக்கையால் இடித்தனர். பின், மூன்று பேரும் அலகு குத்தி கொண்டு அந்தரத்தில் பறந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.