பதிவு செய்த நாள்
18
ஆக
2017
01:08
ஆர்.கே.பேட்டை; சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு, வரும் திங்கட்கிழமை துவங்கி, புதன் கிழமை வரை, மூன்று நாட்களுக்கு பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது.ஆர்.கே.பேட்டை, பிராமணர் தெருவில் அமைந்துள்ளது பழமையான சுந்தரராஜ பெருமாள் கோவில், 1987ல், புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மார்கழி உற்சவம், ஆண்டு பிரம்மோற்சவம், நித்ய பூஜைகள் நடந்து வருகின்றன. ஆவணி மாதத்தில், பவித்ர உற்சவமும் நடத்தப்படுகிறது. வரும் திங்கட்கிழமை பவித்ர உற்சவம் துவங்குகிறது. திங்கட்கிழமை, காலை, 5:00 மணிக்கு, பகவத் பிரார்த்தனை, மேதினி பூஜை, அங்குரார்ப்பணம் நடக்கிறது.மறுநாள், காலை, 7:00 மணிக்கு, திருமஞ்சனம், 9:00 மணிக்கு பவித்ர பிரதிஷ்டையும், மாலை, 6:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு செய்கிறார். இரவு, 9:00 மணிக்கு, ஏகாந்த சேவை நடைபெறும். மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, 6:00 மணிக்கு காலசந்தி, 7:00 மணிக்கு திருமஞ்சனம். 10:00 மணிக்கு யாகசாலை திருவாராதனம். மாலை, 6:00 மணிக்கு கும்ப புறப்பாடு, பத்ம பிரதக்ஷணம், மகாநிவேதனம், ஷோபன அட்சதை, பிரம்ம அனுக்கிரகம், சாற்று முறை நடக்கிறது.