பதிவு செய்த நாள்
18
ஆக
2017
01:08
பெருமாகவுண்டம்பட்டி: ரெட்டிப்பட்டி யோக ஆஞ்சநேயர் கோவிலில், விஷ்ணுபதி புண்ணிய காலத்தையொட்டி பூஜை நடந்தது. மூன்று தமிழ் மாதப்பிறப்புக்கு ஒருமுறை, விஷ்ணுபதி புண்ணிய காலம் கொண்டாடப்படுகிறது. சேலத்தில், இதற்கென விஷ்ணுபதி கமிட்டி அமைத்து, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் சிறப்பு பூஜை செய்கின்றனர். அதன்படி, வீரபாண்டி, பெருமாகவுண்டம்பட்டி பஞ்சாயத்து, ரெட்டிப்பட்டியில் உள்ள யோக ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, புனிதநீர் கலசங்கள் வைத்து, கணபதி, லட்சுமி ஹயக்ரீவ, மஹா சுதர்சன, தன்வந்திரி ஆகிய ஹோமங்கள் மற்றும் யாக பூஜை நடந்தது. மேலும், விஸ்வரூப பெருமாளுக்கு, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. அலங்கரித்த சப்பரத்தில் எழுந்தருளிய பெருமாள், கோவிலை சுற்றி அழைத்து வரப்பட்டார். இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், மாணவ, மாணவியருக்கு பேனா, பென்சில் வழங்கப்பட்டது.