பதிவு செய்த நாள்
23
ஆக
2017
10:08
காடுபட்டி, குருவித்துறை குருபகவான் கோயிலில் செப்.,2ல் நடக்கும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆக.31 முதல் அனைத்து ராசிகாரர்களுக்கும் பரிகார பூஜையாக லட்சார்ச்சனை துவங்குகிறது. சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் முன் குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு செப்.,2 காலை கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் இடபெயர்ச்சி ஆகிறார். இதை முன்னிட்டு அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜையாக கோயிலில் ஆக.,31 காலை 10:35 மணிக்கு தொடங்கி செப்.,1 இரவு 8:00 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. குருபெயர்ச்சியன்று யாகசாலையில் கலசங்களில் புனிதநீர் நிரப்பி வைத்து, காலை 6:00 மணி - 9:27 மணிக்கு மகாயாகம், பரிகார திருமஞ்சனம், பரிகார அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கும். கோயில் நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் கூறுகையில், லட்சார்ச்சனையில் பங்குபெறுவோர் 300 ரூபாய் செலுத்தினால் குருபகவான் படம் உள்ள 2 கிராம் வெள்ளி டாலருடன், பிரசாத பை வழங்கப்படும். 100 ரூபாய் செலுத்துபவர்களுக்கு பிரசாத பை மட்டும் வழங்கப்படும். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில், தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில்களிலும் லட்சார்ச்சனை டிக்கெட் கிடைக்கும், என்றார்.