ஆன்மிக கல்வி மிக அவசியம் - சொல்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2017 05:09
● ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை அனைவருக்கும் ஆன்மிக விஷயங்களை போதிப்பது மிக அவசியம். ● அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தனம். ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தின் அடையாளம். ● அறிவு நூல்களை கரைத்து குடித்திருந்தாலும், ஆன்மிக அறிவு இல்லாவிட்டால் அனைத்தும் வீணாகி விடும். ● இதயப்பூர்வமாக கடவுளைத் தேட வேண்டியது மனிதனின் அடிப்படை கடமை. ● சுயநலம் இல்லாமல் பிறருக்கு சேவை செய்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். ● மனிதனின் குணத்தை உருவாக்குவதில், உணவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ● சில நேரத்தில் பேசுவதைக் காட்டிலும், மவுனம் காப்பது மிகுந்த நன்மையளிக்கும். ● வெளியில் தெரியும் வறுமையை விட, மனத்தில் இருக்கும் வறுமையே அபாயமானது.