Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பச்சைமலை முருகன் கோவிலில் டிச.,4ல் ... நடராஜர் மண்டகபடி மண்டபம்: புதர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தி கோஷங்களுடன் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2011
11:12

ஊட்டி : ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. ஊட்டி எல்க்ஹில் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 108 திருப்படிகள், அறுபடைவீடு மண்டபங்கள், 3 ராஜகோபுரங்கள், மகா மண்டபம், அர்த்த மண்டபம், சொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில், 40 அடி முருகன் திருவுருவச்சிலை, குகை சித்தி விநாயகர், காளியம்மன், ஜலகண்டீஸ்வர சுவாமி கோவில்கள் அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.கடந்த 27ம் தேதி காலை 8.30 மணிக்கு வினாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை 6.30 மணிக்கு வேததிருமுறை பாராயணத்துடன் விழா துவங்கியது.தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், நாடிசந்தானம், 4ம் கால வேள்வி, திரவிய சமர்ப்பணம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 9.05 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 9.45 மணியளவில் விமான கலச மகா கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேம் நடந்தது. ஊட்டி எம்.எல்.ஏ., புத்திசந்திரன், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், நகராட்சி தலைவர் சத்தியபாமா, துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், கவுன்சிலர் சம்பத், கோவை மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன், உதவி ஆணையர் ஆறுமுகம், செயல் அலுவலர் நாகராஜ், ஆய்வாளர் சீனிவாசன், கோவில் அர்ச்சகர் திருஞான சம்பந்தம் மற்றும் உபயதாரர்கள் முன்னிலை வகித்தனர். காலை 11.00 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி திருவீதி உலா நடந்தது.ஊட்டி நகர இந்து முன்னணி சார்பில், 250 கிலோ பஞ்சாமிருதம், 100 கிலோ திருநீறு, குங்குமம் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மகா கும்பாபிஷேக குழுவினர், திருப்பணி உபயதாரர்கள் மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 3வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசி விழா ... மேலும்
 
temple news
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் மழை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar