காவிரி துலாக்கட்டத்தில் தருமபுரம் ஆதின குருமகா சன்னிதானத்திற்கு புஷ்பாஞ்சலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2017 12:09
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழாவின் 5ம் நாளான நேற்று தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமா ச்சாரிய சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் காவிரி துலாக்கட்டம் வடக்கு கரைக்கு எழுந்தருளிய தருமபுரம 26வது கு ருமகா சன்னிதானத்திற்கு இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கனகாபிஷேகம், புஷ்பாஞ்சலி செய்து வைத்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசினார். தொடர்ந்து காவிரியின் இருகரைகளிலும் ஆரத் திவழிபாடு நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த சுவாமிகள், புஷ்கரம் விழாக்குழு தலைவர் சுவாமி ராமானந்தா ம கராஜ், ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி, செயலாளர் முத்துக்குமரசாமி, ஆதீன கல்லூரி முதல்வர் சாமிநாதன், முன்னாள் முதல்வர் திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கல ந்துகொண்டு தரிசனம் செய்தனர்.