பதிவு செய்த நாள்
22
செப்
2017
01:09
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கோட்டைமேடு காளியம்மன், கைலாசநாதர், அக்ரஹாரம் லக்ஷ?மிநாராயண சுவாமி உள்ளிட்ட கோவில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. திருச்செங்கோடு அறநிலையத்துறை தக்கார் சுந்தர் தலைமை வகித்தார். காளியம்மன் கோவிலில், 81 ஆயிரத்து, 392 ரூபாய், கைலாசநாதர் கோவிலில், 14 ஆயிரத்து, 871 ரூபாய், லக்ஷ?மிநாராயண சுவாமி, காசி விஸ்வேஸ்வரர், ஆஞ்சநேயர் சுவாமி கோவில்களில், 50 ஆயிரத்து, 7 ரூபாய் என, ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 270 ரூபாய் இருந்தது. பக்தர்கள், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர்.