திருப்புத்தூர் கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2017 01:09
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர்,பூமாயி அம்மன், நின்ற நாராயணப்பெருமாள் கோயில்களில் செப்.,21ல் நவராத்திரி விழா துவங்கியது. கொலுக்களை பார்க்க மகளிர்,குழந்தைகள் உற்சாகத்துடன் கோயில்களுக்கு வருகை தருகின்றனர். திருத்தளிநாதர் கோயிலில் சிவகாமிஅம்மனுக்கு காலை 7:00மணிக்கு அபிே ஷகம் நடந்தது. திருநாள் மண்டபத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு மாலையில் அம்மன் சிவகாமி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினார். ராஜ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.பூமாயி அம்மன் கோயிலில் 27 வது ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டுமாலை 5:00 மணி அளவில் லட்ச்சார்ச்சனை, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகத்துடன் துவங்கியது. கொலு மண்டபத்தில் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார்.நேற்று அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செப்.,26ல் மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், செப்.,30 இரவு 8 :00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தலும் நடைபெறும்.
நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் காலை 10 :00 மணிக்கு மூலவர் லெட்சுமிக்கு சிறப்பு அபிசேகத்துடன்விழா துவங்கியது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் உற்சவர் ஆண்டாள் அலங்காரத்தில் எழுந்தருளினார்.மகாலெட்சுமி அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. பெண்கள், குழந்தைகள் கூட்டம் கூட்டமாக உற்சாகத்துடன் கோயில்களுக்கு சென்று அம்மனை தரிசிப்பதுடன் கொலு பொம்மைகளை பார்வையிட்டு வருகின்றனர்.