காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் சனி பகவானுக்கு, புதிதாக ரூ.7 லட்சம் மதிப்பில் ரத்தின அங்கி சாற்றப்பட்டது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர். நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் காணிக்கை மூலம் ரூ.7 லட்சம் மதிப்பில் சனி பகவானுக்கு புதிதாக செய்யப்பட்ட வெள்ளிக் கற்கல் கொண்ட ரத்தின அங்கி சாற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள், எஸ்.பி.,மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.