பதிவு செய்த நாள்
03
நவ
2017
11:11
வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில், ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வந்தார்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காசிவிஸ்வநாதர் சன்னதியில் நேற்று முன் தினம், மாலை, 6:00 மணிக்கு பிரதோஷ பூஜை நடந்தது. சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிருதம், அரிசிமாவு போன்றவைகளால் அபிஷேக வழிபாடு நடந்தது.அதன் பின், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மாலை, 6:05 மணிக்கு ரிஷப வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளிய காசிவிஸ்வநாதர் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.