பதிவு செய்த நாள்
03
நவ
2017
11:11
பொள்ளாச்சி:சின்னநெகமம் மாரியம்மன் கோவில் திருவிழா, ஏழு கிராமங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.நெகமம் அடுத்துள்ள சின்னநெகமம், பெரியநெகமம், ரங்கம்புதூர், சின்னேரிபாளையம், காளியப்பம்பாளையம், உதவிபாளையம் மற்றும் அய்யம்புதூர் ஆகிய ஏழு கிராமங்களில், சின்னநெகமத்திலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.திருவிழாவில் நேற்று, பூவோடு வழிபாடு துவங்கியது. அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர். விழாவின் இறுதி நாளான இன்று, கம்பம் இறக்குதலும், தொடர்ந்து மஞ்சள் நீராடலும், மகா அபிஷேகமும் நடக்கிறது.