நாமக்கல்: கோபாஸ் அஷ்டமியை முன்னிட்டு, நாமக்கல் அடுத்த, வள்ளிபுரத்தில் கோமாதா பூஜை நடந்தது. நகர, பா.ஜ., தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். அகில இந்திய கிசான் சங்கத்தின், வழிகாட்டு குழு உறுப்பினர் கணேசன், அஷ்டமி குறித்தும், இயற்கை விவசாயம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார். விழாவில், நாட்டு இன பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விவசாயி செந்தாமரை, நகர பொது செயலாளர் செந்தில்குமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.