Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பத்தியில் ஆண்டாள் வைபவம் ... கூடலுார் ராஜகாளியம்மன் கோயில் விழா: அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபாடு கூடலுார் ராஜகாளியம்மன் கோயில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலத்தில் திருவிழா முடிவடைந்தும் குவியும் பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
தாயமங்கலத்தில் திருவிழா முடிவடைந்தும் குவியும் பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
10:04

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நிறைவு பெற்ற நிலையிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மானாமதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10நாட்கள் நடைபெற்ற விழாவில் அம்மன் அலங்காரங்களுடன் சிம்மம்,குதிரை,காமதேனு,அன்னம், பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா கடந்த 5ம் தேதி நடைபெற்றது.6ம் தேதி மின் அலங்கார தேர்பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி சென்றனர். கடந்த 8ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெற்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் மானாமதுரை வழியாக தாயமங்கலத்திற்கு சென்றனர். இதனால் மானாமதுரை பகுதியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாயமங்கலம் கோயிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar