தேவதானப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2017 11:11
வைகை அணை வரதராஜ்நகர் பத்ரகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. யாகம் வளர்த்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். விளக்கு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.
முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, வைகைபுதூர், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
சில்வார்பட்டி காளியம்மன் கோயிலில் அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது. அன்னாபிஷேகம் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.