Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தி.மலை தீப விழாவில் தெப்ப உற்சவம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பொலிவுக்கு ஏங்கும் உத்தம சோழபுரம் கோவில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2011
12:12

சேலம் : சேலம்- கோவை ரோட்டில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த உத்தமசோழபுரம் கோவிலில், அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சேலத்திலிருந்து, 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உத்தமசோழபுரத்தில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன சிறப்பு வாய்ந்த கரபுரநாதர் கோவில் அமைந்துள்ளது. சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் அவரவர் ஆட்சி காலத்தில் இக்கோவிலை புதுப்பித்தும், பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியும் பாதுகாத்து வந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கிறது.இக்கோவிலில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னரின் மகள்கள் அங்கவை மற்றும் சங்கவைக்கு, அவ்வையார் முன்னின்று திருமணம் நடத்தி வைத்ததாகவும் வரலாற்று செப்பேடுகள் தெரிவிக்கிறது.மூலிகை சித்துகளில் கைதேர்ந்தவரான காலங்கிரிநாதர் என்ற கரடிசித்தர், இக்கோவில் சிறப்பு குறித்து, தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். பவுர்ணமி, பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் இக்கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.பல்வேறு வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவிலை, இந்து அறநிலையத் துறை பராமரித்து வருகிறது. பல்வேறு கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்டு, 74 லட்சத்துக்கு சுற்றுசுவர், தேர் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டிருந்தாலும், தற்போது பராமரிப்பு இல்லாமல், அனைத்தும் பாழடைந்த நிலையில் உள்ளது.கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் நடைபாதை முழுவதும் அசுத்தங்கள் நிரம்பியுள்ளது. மேலும், கோவிலில் போதிய குடிநீர் இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் பழுதாகி நீண்ட நாட்களாகியும் சரி செய்யப்படவில்லை. கோவிலை சுற்றி புதர்கள் அடர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் புகுந்து விடுகிறது. கோவில் கோபுரத்தின் மீது சக்திவாய்ந்த இடிதாங்கி பொருத்தவும், பழமை வாய்ந்த இக்கோவிலில் போதிய அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்த வேண்டும், கோவிலுக்கு வெளியே திறந்த வெளியில் வைத்துள்ள அவ்வையாருக்கு அமைக்க வேண்டும், என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar