திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி உற்சவம்: நவ.19ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2017 12:11
திருப்புத்துார், திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் யோகபைரவருக்கு சம்பகசஷ்டி உற்சவம் நவ.19 துவங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது. திருப்புத்துார் பகுதியில் உள்ள அஷ்ட பைரவர்களில் முதன்மையானவர் திருத்தளிநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள யோக பைரவர் ஆவார். இவருக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சம்பகசஷ்டி உற்சவம் நடைபெறும். அப்போது 6 நாட்களுக்கும் அஷ்டபைரவர் யாகம் நடைபெறும். காலை 9:௦௦ மணிக்கு துவங்கி மதியம் 11:30 மணிக்கு பூர்ணாகுதி, பகல் 12:௦௦ மணிக்கு அபிஷேகம், பகல் 1:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மீண்டும் அஷ்ட பைரவர் யாகம் துவங்கி இரவு 8:௦௦ மணி வரை நடைபெறும். ஏற்பாட்டினை ஐந்து கோயில் தேவஸ்தானம் மற்றும் சம்பகசஷ்டி விழாக்குழுவினர் செய்கின்றனர்.