காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2017 11:11
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினம் கொண்டாடப் பட்டது. அம்பாளுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், அபிஷேக பொடி கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு ஐந்தாயிரம் பேருக்கான அன்னதானம், மாலை 4:30 மணிக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணியளவில் அம்பாள் வெள்ளி ரத வீதி உலா வந்தார். பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை தக்கார் ராமசாமி தலைமையில் செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகு பாண்டி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.