பதிவு செய்த நாள்
23
நவ
2017
01:11
சென்னை:ராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளை சார்பில், திருஅருட்பா ஒப்பித்தல் போட்டி நடக்க உள்ளது.சென்னை, மாடம்பாக்கம், ராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளை சார்பில், வரும், டிச., 25ம் தேதி, பள்ளி மாணவர்களுக்கான, திருஅருட்பா ஒப்பித்தல் போட்டி நடக்க உள்ளது. தாம்பரம், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள, வள்ளுவர் குருகுலம் மேல் நிலைப்பள்ளியில், இப்போட்டிகள் நடக்க உள்ளன. ஏதாவது,10 பாடல்கள்ஒப்புவிக்கும், ஒன்றுமுதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, குங்கிலியம் பழசண்முகனார் நினைவு முதல் பரிசாக, 1,500 ரூபாய் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக,1,000 ரூபாய் இருவருக்கு,மூன்றாம் பரிசாக,500 ரூபாய் மூவருக்கு வழங்கப்பட உள்ளது. ஆறு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும், ௧௫ பாடல்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு, திருமுறை கலாநிதி வேலாயுதம் ஓதுவார் நினைவு முதல் பரிசாக, 2,000ரூபாய் ஒருவருக்கு... இரண்டாம் பரிசாக, 1,500 ரூபாய் இருவருக்கு, மூன்றாம் பரிசாக, 1,000 ரூபாய் மூவருக்கு கிடைக்க உள்ளன. பின்னலுார் துரியானந்தர் நினைவு சிறப்பு பரிசு மற்றும் ராமசுவாமி - ராஜம்மாள் அறக்கட்டளை சிறப்பு பரிசு, தலா நால்வருக்கு வழங்கப்பட உள்ளன. பெயர், வகுப்பு,
முகவரி, மொபைல்போன் எண், பெற்றோர், மாணவர் கையொப்பத்துடன், டிச., 15௫ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மேலும், விபரங்களுக்கு, 94441 78460 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.