Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் கோவில் கும்பாபிஷேகம் திருமலைகிரி கோவில் வழக்கு: டிசம்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’ஆண்டவன்’ சொத்தை மீட்க ’பல்லாண்டு’: வாகீஸ்வரர் கோவில் நிலம் 24 ஏக்கர் மீட்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2017
01:11

அந்தியூர்: பட்லூர் வாகீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 24 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளுக்குப் பின், ஒருவழியாக நேற்று மீட்கப்பட்டது.

அந்தியூரை அடுத்த பட்லூரில் வாகீஸ்வரர், சென்றாயப்பெருமாள் மற்றும் கரியகாளியம்மன் கோவில்கள் உள்ளன. இவை, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. கடந்த, 2008 முதல், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு, 60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவை தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பட்டா மாறுதலும் செய்யப்பட்டிருந்தது. இவை, 2013ல் கோவில் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டது. அறநிலைய, வருவாய் துறை அதிகாரிகள், நிலங்களை அளந்து குத்தகைக்கு விட்டனர். ஆனால், சாகுபடி செய்தவர்கள், முறையாக குத்தகை செலுத்தவில்லை. இதனால் அவர்கள் மீது, 2014ல் வழக்கு தொடரப்பட்டது. அவர்களை வெளியேற்றி நிலத்தை மீட்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த, 2017ல் ஏழு பேர், 14.52 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தனர். மீதி, 15 பேர் நிலத்தை ஒப்படைக்கவில்லை. இந்நிலையில் அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா தலைமையில், அந்தியூர் தாசில்தார் செல்லையா முன்னிலையில், கோவில் நிலம் மீட்கும் பணி நேற்று நடந்தது. இதில், 24 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. ஆன்மிகம் ஆதிக்கம் செலுத்தினாலும், ஆண்டவனுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறர் அனுபவத்தில், பாடம் பெறாமல், சொந்த அனுபவத்தில் பாடம் பெறவே, பெரும்பாலானோர் விரும்புகின்றனரே?

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar