பதிவு செய்த நாள்
29
நவ
2017
12:11
புதுச்சேரி : காளத்தீஸ்வரர் கோவிலில் இன்று (29ம் தேதி) ஏகாதச ருத்ராபிஷேகம் நடக்கிறது. புதுச்சேரி, மிஷன் வீதியில், ஞானாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று மாலை 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன், ஏகாதச ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம் துவங்கியது. இன்று காலை 7:00 மணிக்குமேல், மதியம் 12:00 மணிக்குள், ஏகாதச ருத்ராபிஷேகம், கலசாபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடக்கிறது.
சுதர்சன ஹோமம்: காளத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் நாளை (30ம் தேதி) மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு, இன்று (29ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, அக்னி பிரதிஷ்டை, ஹோமம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, நாளை காலை 8:00 மணிக்கு, மகா சுதர்சன ஹோமம், 10:00 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம், 11:00 மணிக்கு, கடம் புறப்பாடு, புரோஷணம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.