செட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2017 12:12
ஓமலூர்: ஓமலூர், செவ்வாய்ச்சந்தை அருகே உள்ள, ஆயிர வைசிய சமூகத்துக்குட்பட்ட, செட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு யாகசாலையில், ரக்?ஷாபந்தனம், நாடிசந்தனம், தீபாராதனை முடிந்த பின், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடந்தது. 9:30 மணிக்கு மூலஸ்தன கோபுரத்துக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர், சுப்ரமணியர், துர்க்கையம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.