சபரிமலைக்கு சைக்கிள் யாத்திரை சென்ற ஆந்திர பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2017 11:12
வடமதுரை:ஆந்திராவில் இருந்து சைக்கிள் பயணத்திலேயே 4 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர்.ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடா அருகில் ஏரல் பகுதியை சேர்ந்தவர்கள் ஏரபாபு, ஹரி, வீரராஜ், ரெங்கபாபு.இவர்கள் நால்வரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒரு குழுவாக கடந்த டிச.4ல் சைக்கிளில் புறப்பட்டனர். சென்னை, திருச்சி, திண்டுக்கல், தேனி, குமுளி வழியே ஆயிரத்திற்கும் அதிகமான கி.மீ., துாரத்தை சைக்கிளிலேயே பயணித்து சபரிமலை நோக்கி சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலுாரில் சிறிது நேரம் தங்கி புறப்பட்ட அவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் சைக்கிள் மூலம் பயணம் செய்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வது எங்கள் வழக்கம். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பயணத்தை நிறைவு செய்து, தரிசனம் முடிந்து ஊர் திரும்புவோம் என்றனர்.