Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சச்சிதானந்த சுவாமிகள் சென்னை விஜயம் ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: வைரஅபய ஹஸ்தம் அணிந்து நம்பெருமாள் சேவை ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமனை வழிபட்டால் சனி பயம் வேண்டாம்; கல்யாணராமன் அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2017
12:12

திருப்பூர் : “சனி பிடித்தால் பயப்பட வேண்டாம்; அனுமனை வழிபட்டால், எல்லா துன்பங்களும், நீங்கி விடும்,” என, சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார். ஸ்ரீ வீர ஆஞ்சநேய பக்த பேரவை சார்பில், கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, அவிநாசி ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் நடந்து வருகிறது; இதில்,‘நள சரித்திரம்’ என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: போதும் என்ற மனநிலை இருந்தால், மனிதர்களுக்கு துன்பம் இல்லை. நளச்சக்ரவர்த்தி ஆட்சி செய்த நாட்டில், பருந்தும், கிளியும் ஒரே கூட்டில் ஒற்றுமையாக வசிக்கும் அளவுக்கு, சுபிட்ஷம் இருந்தது. அங்கு வந்த ஒரு அன்னபட்சி, நளனுக்கும் தமயந்திக்கும் தூது சென்று, அவர்களின் காதலை வளர்த்தது. அது தான், அன்னம் விடு தூதானது.

முந்தைய ஜென்மத்தில், ஒரு வேடன், தன் மனைவியுடன் காட்டு குகையில் வசித்தான். அவ்வழியே இருட்டில் வந்த ஒரு துறவியை வரவேற்று, உணவளித்து, குகைக்குள் தங்க வைத்தான். நள்ளிரவில், குகைக்கு வெளியில் காவலிருந்த வேடனை, கொடிய மிருகம் கொன்றது. இதையறிந்து, அவன் மனைவி உயிர்விட்டாள். போன பிறவியில், வேடனாக இருந்தவன் நளனாகவும், வேடனின் மனைவி, தமயந்தியாகவும் பிறந்தனர். அன்னபட்சியாக வந்தது, குகையில் வந்து தங்கிய துறவியே. துறவியாக வந்து, தம்பதியை பிரித்தவர், அன்னபட்சியாக வந்து, நளன், தமயந்தியை ஒன்று சேர்த்தார். பிரச்னைகள் இல்லாமல், வாழ்க்கை இல்லை; அதை சமாளிக்க வேண்டும்.

‘சனி’ பிடித்துவிட்டது என, பயப்பட தேவையில்லை. இறைவழிப்பாட்டால், அதன் பாதிப்புகளை தவிர்க்கலாம். இறைவனின் நாமத்தை சொல்பவர்களை, ‘சனி’ ஒன்றும் செய்யாது. ‘சனி’ பிடித்தால், அனுமனிடம் செல்ல வேண்டும். ‘சனி’யால் பாதிக்கப்படுவோர், நள சரித்திரம் கட்டாயம் கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் ... மேலும்
 
temple news
மார்கழி மாதம் புனிதமானது. மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் புத்தாண்டைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar