Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் திருவாதிரை ... வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவனை அடைவது தான் லட்சியம் : கமலாத்மானந்தர் பேச்சு
எழுத்தின் அளவு:
இறைவனை அடைவது தான் லட்சியம் : கமலாத்மானந்தர் பேச்சு

பதிவு செய்த நாள்

25 டிச
2017
11:12

சிவகாசி: ”இறைவனை அடைவது தான் வாழ்க்கையின் முதல் லட்சியமாக இருக்க வேண்டும்.மக்களை இறைவனாகக் கருதி தொண்டு செய்ய வேண்டும்,” என மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் சிவகாசியில் நடந்த ஆன்மிக வெள்ளிவிழா மாநில மாநாட்டில் பேசினார். சிவகாசி கோணம்பட்டியில் ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் 25வது வெள்ளி விழா மாநில மாநாட்டின் இரண்டாம்நாள் விழா நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கியது.

தர்மாத்மானந்த ஜி மங்கள ஆரத்தி செய்தார். ஆத்மனானந்தர் வழிகாட்டுதல் தியானத்தை ஒருங்கிணைந்து நடத்தினார். அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் பொதுதுணைத்தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் மற்றும் ஊட்டி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ராகவேஷானந்தர் விழா மலரை வெளியிட்டனர். இதில் கமிட்டி நிர்வாகி தாமரைக்கண்ணன், ஐ.நா., சபை ஊழியரும் கமிட்டி உறுப்பினருமானசந்திரசேகரன் வேலுச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். கும்பகோணம் ஜனார்த்தனனின் வயலின் கச்சேரி நடந்தது. இதையடுத்து ராமகிருஷ்ணமடத்தின் தலைவர்கள் பேசினர்.

ஆசாபாசங்கள் விலகும் : மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் பேசியதாவது: ராமகிருஷ்ணரின் வாழ்க்கை மூன்று முக்கிய செய்திகளை உலகிற்கு தருகிறது. இறைவனை அடைவது தான் வாழ்க்கையின் முதல் லட்சியமாக இருக்க வேண்டும். மக்களை இறைவனாகக் கருதி தொண்டு செய்ய வேண்டும். எல்லா மதங்களும் இறைவன் ஒருவனே என்று தான் கூறுகின்றன. எனவே சமய சமரசம், மத நல்லிணக்கம் நமக்கு அவசியம் இருக்க வேண்டும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, பிறகு பலாப்பழத்தை அறுக்க வேண்டும். அப்போது தான் பிசின் ஒட்டாது. இதுபோல் மனதில் பக்தியை வளர்த்துக் கொண்டு, நாம் உலகில் வாழ வேண்டும். அவ்விதம் செய்தால், உலகப்பற்றில் நாம் சிக்கிக்கொள்ள மாட்டோம். நாம் கிழக்கு திசையை நோக்கி சென்றால், இயல்பாகவே மேற்கு திசையிலிருந்து விலகுகிறோம். இதுபோல் நம் மனம் இறைவனை நோக்கி சென்றால், உலகின்ஆசபாசங்களிலிருந்து விலகி விடும். மனம் ஒரு வெள்ளைத்துணிபோன்றது. எந்த சாயத்தில் தேய்த்தாலும் அந்தச் சாயத்தை வெள்ளைத்துணி பெற்று விடும். இதுபோல் நம் மனதில் இறைவனைப் பற்றிய சிந்தனை என்ற சாயத்தில் தேய்த்து எடுக்க வேண்டும். அப்போது மனம் தெய்வீகத்தன்மை என்ற சாயத்தை பெற்றுவிடும். வயிற்றுபசிக்கு உணவு தேவை. ஜபம், தியானம், பிரார்த்தனை ஆகியவை ஆன்மாவுக்கு உரிய உணவாகும். இவ்வாறு அவர் பேசினார். இன்று (டிச., 25) சாரதாதேவி தினமாகவும், நாளை விவேகானந்தர் தினமாகவும் கொண்டாடி மாநாடு நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar