Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மகா ... தர்மசாஸ்தா திருக்கல்யாண மகோற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோயிலில் திருப்படி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருத்தணி கோயிலில் திருப்படி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
02:01

திருத்தணி : திருத்தணி முருகன்கோயிலில், நேற்று நடந்த திருப்படி திருவிழாவில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோயிலில், திருப்படி திருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, காலை 8:30 மணிக்கு சரவண பொய்கை குளம் அருகில் உள்ள மலையடிவாரத்தில், கோயில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி, அரக்÷õணம் எம்.பி. அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், ஆவின் சேர்மன், சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். பஜனை குழவினரை வரவேற்று, படித் திருவிழாவை துவக்கி வைத்தனர்.

கோயில் நிர்வாகம், சார்பில், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பஜனை கோஷ்டியினர், ஒவ்வொரு படியிலும், பக்தி பாடல்கள் பாடிவாறு மலைக்கோயிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர். மேலும், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்க, ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றியவாறு மலைக்கோயிலுக்கு சென்று வழிபட்டனர். காலை, 11:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு, தங்க கீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று நடந்த படித்திருவிழாவில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்ததால், மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar