Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல்லில் பொங்கல் விழா ... மூணாறு ஹனுமன் மலையில் 30,001 தீபங்கள்: மகரவிளக்கு நேரத்தில் வழிபாடு மூணாறு ஹனுமன் மலையில் 30,001 தீபங்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகிம்சை போதிக்கும் சமணர் சிற்பங்கள்
எழுத்தின் அளவு:
அகிம்சை போதிக்கும் சமணர் சிற்பங்கள்

பதிவு செய்த நாள்

15 ஜன
2018
12:01

கம்பம்: ‘அகிம்சை, மாமிசம் உண்ணாமை, கொல்லாமை, தியானம், நல்லறிவு, நல் ஒழுக்கம், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமை’ என்பன உள்ளிட்ட பல்வேறு அரிய கருத்துக்களை இந்த சமுதாயத்திற்கு சொல்லித்தந்தது சமண மதம். அதில், 24 வது தீர்த்தங்கரராக தோன்றிய மகாவீரர் தான் ஆணிவேராக இருந்துள்ளார். பீஹார் மாநிலம் குண்டாவில் கி.மு. 599ல் பிறந்தார். தனது 30 வயதில் துறவறம் பூண்ட மகாவீரர் அரச குடும்பத்தைச்  சேர்ந்தவராவார். எளிய வாழ்க்கையும், துறவற நிலையை பின்பற்றுவதே சமணம் என்ற பொருளாகும். இத்ததைய பெருமைக்குரிய சமணர்கள் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் 9 ம் நுாற்றாண்டில் பல பகுதிகளில் தங்கி தங்களின் மதக் கொள்கைகளை பரப்பினர்.

தமிழகத்தில் 26 குகைகள், 200 கல் படுக்கைகள், 100 சமண சிற்பங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானதாக உத்தமபாளையம் சமண சிற்பங்கள் உள்ளன. அவை அவர்களின் வாழ்க்கையை நமக்கு படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக திகழ்கிறது.  இங்கு கருப்பணசாமி கோயில் மலையடிவாரத்தில் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சமணர் சிற்பங்கள் பலரையும் கவர்கிறது. இங்கு 21 சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு அருகில் உள்ள சுனை நீர் ஒரு காலத்தில் இப்பகுதியில் குடிநீராக பயன்பட்டது. சமண மதத்தை பரப்புவதற்காக கல்வியறிவு, மருத்துவம் போன்ற சேவைகள் செய்துள்ளனர். இங்குள்ள சமணர் சிற்பங்களை தொல்லியல் துறையினர் 50 ஆண்டிற்கு முன்பே கண்டுபிடித்து அழியாமல் பாதுகாக்க கற்களால் ஆன செட் அமைத்துள்ளனர்.  ஆனால் காலப் போக்கில் இவை  கேட்பாரற்று சிதைந்து வருகிறது. வரலாற்று பொக்கிஷமாகவும், அதை  பறை சாற்றும் காலக்கண்ணாடியாகவும் திகழ்ந்துவரும் இதனை காப்பது அனைவரின் கடமை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar