பதிவு செய்த நாள்
22
ஜன
2018
01:01
திருப்பூர்;திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள பல கோவில்களில், இன்று காலை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
திருப்பூர், முருகம்பாளையத்திலுள்ள ஸ்ரீ மாரியம்மன் @காவிலில், இன்று காலை, 6:00 முதல், 7:00 மணிக்கள், கிழக்கு பிள்ளையார் ேகாவில், காலை, 9:00 மணிக்கு ேமல் மாரியம்மன் மூலவர், ேகாபுரம், பரிவார மூர்த்தி ேகாபுரம் ஆகியவற்றுக்கு, கும்பாபிேஷகம் நடக்கிறது. விழாவையொட்டி, காலை, 10:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, டி.பி.ஏ., காலனியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி கோவிலில், காலை, 9:05 மணிக்கு ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம், கூனம்பட்டி ஆதின திருமடம், நடராஜ சுவாமிகள் தலைமையில், நடைபெறுகிறது. பகல், 12:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.
கருமத்தம்பட்டி, கருவேலங்காடு பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், ஸ்ரீ ராமர் கோவிலில், காலை, 9:00 மணியளவில் நடக்கிறது. அதை தொடர்ந்து, 9:30 மணிக்கு, மூல மூர்த்திகளுக்கும், சவுடேஸ்வரி அம்மனுக்கும் மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற உள்ளது.
திருப்பூர், லட்சுமி நகர் 2வது வீதியில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில், இன்று காலை, 9:15 மணிக்கு விமான சாளகோபுரம் கும்பாபிஷேகமும், 9:30 மணிக்கு ஸ்ரீ ஆதி விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, மஹா அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டு, காலை, 10:30 மணிக்கு, குலாலர் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருப்பூர், 4 வேலம்பாளையம், காவிலிபாளையம், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், இன்று காலை, 9:30 மணிக்கு, கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளாசி வழங்கி பேசுகிறார்.
திருப்பூர் அருேக கணக்கம்பாளையம், மீனாட்சி நகர் கிழக்கு பகுதியில், வெங்கடேச நகரில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை, நடைபெற உள்ளது. காலை, 9:00 மணிக்கு, செல்வ விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.