Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூட்டம் அதிகரிக்கும் கோவிலில் ... திருப்பாச்சூர் அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்பாபா கோவிலின் 15ம் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2018
01:02

திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று நடந்த, 15ம் ஆண்டு உற்சவ விழாவில், திரைப்பட இசைமைப்பாளர்கள் உட்பட, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள சாய் நகரில், ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலின், 15ம் ஆண்டு உற்சவ விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது.

காலை, 9:30 மணிக்கு, சகஸ்ரநாம அர்ச்சனை, மஹன்யாச பூர்வக ஏகாதசி ருத்ராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை், 11:30 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு கலசநீர் அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், திரைப்பட இசை அமைப்பாளர்கள் சங்கர்கணேஷ், ஜீவாவர்ஷினி ஆகியோரின் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. பிற்பகல், 2:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, ஓம் சாயி, ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி நாம ஜெபம் பஜனைக்குழுவினரால் பாடப்பட்டது. நிகழ்ச்சியில், மத்திய அரசின் சுகாதார துறை முதன்மை மருத்துவ அலுவலர் கோபாலரத்தினம், கே.ஜி.கண்டிகை கேசவுலு உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சாய்பாபாவை வழிப்பட்டனர். விழாவிற்கு முன்னதாக அதிகாலையில், காகட ஆரத்தி மற்றும் அபிஷேகம், மூலவருக்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar