மீனாட்சி அம்மன்கோயில் தீவிபத்து: வெளி அமைப்பு விசாரணை தேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2018 01:02
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து விசாரணை தொடர்பாக பக்தர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வெளி அமைப்பு விசாரணை நடத்த வேண்டும், என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இக்கோயிலில் பிப்.,2ல் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. நேற்று இரவு 9:25 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்து, பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை செய்தார். பின் தீ விபத்து நடந்த வசந்தராயர் மண்டபம்,கிழக்கு வாசல் பகுதிகளை பார்வையிட்டார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் தொடர்ந்து தீ விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு திருச்செந்துார் கோயிலில் மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். பிப்.2ம் தேதி பெரிய அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை மீனாட்சி கோயில் 20 கடை எரிந்து சாம்பலானதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் கோயிலுக்குள் மட்டும் 115 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில் கடைகள் ெ தாடர்பாக அதிகாரிகளிடம் ெ தளிவு இல்லை. இவ்வளவு பெரிய சந்தையாக கோயிலை மாற்றக்கூடாது. தமிழக கோயில்களில் தனியார் கடைகளை அனுமதிக்க கூடாது. மொத்தம் 115 கடைகள் இருப்பதாகவும், தீ விபத்து நடந்த பகுதியில் 42 கடைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். கோயில்களில் இத்தனை கடைகள் எதற்கு. பூஜை பொருள் விற்க வேண்டுமென்றால், அறநிலையத்துறையே குறைந்த அளவிலான கடைகளை நடத்தலாம். எள், எலுமிச்சை தீபங்களை ஏற்றக்க;ாடது. மீனாட்சி கோயிலில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்கும் கருவிகள் இல்லை. பல்லாயிரகணக்கான பக்தர்களை பாதுகாக்க கோவில் நிர்வாகம், போலீஸ், அரசு போன்றவை இணைந்து செயல்பட வேண்டும். தீ விபத்து விசாரணையில் பக்தர்கள் நம்பிக்கை இல்லை என தெரிவிக்கின்றனர். இதனால் வெளி அமைப்பை கொண்டு விசாரைணை நடத்தலாம். இதில் கோயில் நிர்வாகம் தயக்க கொள்ள தேவையில்லை. பயங்கரவாதிகள் புதிய முறைகளில் தாக்குதல் நடத்துகின்றனர்.் ஏற்கனவே இங்கு வெடிகுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே வெளி விசாரணை தேவை என்பது ஏற்க தக்கது தான். என்றார்.