சிவராத்திரியன்று சிவனுக்கு வில்வார்ச்சனை செய்தால் ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவம் கூட நீங்கிவிடும். ஒரு தளத்தில் மூன்று இலை யுடன் கூடிய வில்வத்தால் சிவனை அர்ச்சிப்பது சிறப்பு. இதனை சிவனின் திரிசூலம் என்றும், முக்கண்களின் குறியீடு என்றும் சொல்வர். லட்சுமி வாசம் செய்வதால் வில்வத்தை ஸ்ரீவிருட்சம் என்பர். சிவனுக்கு, இதை அர்ச்சித்தால் செல்வம் கிடைக்கும். அந்த செல்வத்தை இறைவன் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தத்துவம் காட்டப் படுகிறது. இம்மரத்தை வீட்டில் வளர்த்தால் சிவபுண்ணியம் பெருகும். காசி முதல் ராமேஸ்வரம் வரையுள்ள சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும்.