Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாவத்தொழில் வேண்டாமே! பசுவுக்கு தினமும் அகத்திக்கீரை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணமா.... பாசமா....!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
05:02

காஞ்சிப்பெரியவரின் பக்தர் ஒருவர் சில மாதத்திற்கு முன் பணி ஓய்வு பெற்றார். வருமானம் நின்று விட்டால் யாரும் மதிக்க மாட்டார்கள் என வருந்தினார். அதை கண்ட சுவாமி பரிவோடு, உன் முகத்தில் சந்தோஷம் இல்லையே? என கேட்டார். கண்ணீர் பெருகிய கண்களுடன் அவர், எதை சொல்வது... பிரச்னை ஒன்றா... இரண்டா... காலையில் எழுந்ததும் காபி கிடைப்பதில்லை. வேளா வேளைக்கு சாப்பாடும் வருவதில்லை. வீட்டில் நான் ஒருவன் இருக்கிறேன் என்பதை கூட யாரும் கவனிப்பதில்லை.  எல்லோருக்கும் வேண்டாதவனாகி விட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன் இல்லையா?  இனி என்னால் ஆவது ஒன்றுமில்லை. அதனால் தான் இத்தனை அலட்சியம்! பணியில் இருக்கும் போதே காலமாகி இருக்கலாம். இப்போது நான் உயிரோடிருந்து யாருக்கு லாபம்? என புலம்பினார். ஓய்வு பெற்றதால் உண்டான விரக்தி, தனிமை உணர்வால் அனைவரும் அலட்சியப் படுத்துவதாக எண்ணுகிறார் என்பது சுவாமிக்கு புரிந்தது.

அலுவலக பணியிலிருந்து தானே ஓய்வு பெற்றாய்? வீட்டு பணியில் இருந்து இல்லையே... நான் சொல்கிறபடி செய். தினமும் குளித்து விட்டு அரைமணி நேரம் ஜபம் செய். அதை பார்க்கும் மருமகள் மரியாதையுடன் காபி கொடுப்பாள். பேரன், பேத்தியுடன் இணக்கமுடன் பழகு. அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல். ரேஷன் கடைக்கு போவது, கரண்ட் பில் கட்டுவது என வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு செய். நீ இல்லாமல் வீடு நடக்காது, என்றாக்கி விடு. அப்போது எல்லோரும் தாமாகவே மரியாதையளிப்பர் என்று சுவாமி சொல்லிய போதே பக்தரின் மகன், தந்தை வர நேரமாகிறதே என தேடியபடி வந்தான்.  சுவாமியும் அதைக் கண்டு சிரித்தபடி, பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. உன் மகன் பாசமுடன் உன்னை தேடி வருவதை பார்... இனி மேலாவது நான் சொன்னபடி நடந்து கொள்! என்றார்.  பக்தரும்  மனநிறைவுடன் விடை பெற்றார்.

 திருப்பூர் கிருஷ்ணன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar