புதுச்சேரி: சின்ன சுப்பராயபிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை விழா நேற்று நடந்தது. புதுச்சேரி சின்ன சுப்பராயபிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், 41ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை நேற்று நடந்தது.இதையொட்டி, காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு நரிமேடு மயானத்தில் மயானக்கொள்ளை விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார்,தனி அதிகாரி ஜெனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.