பதிவு செய்த நாள்
23
மார்
2018
11:03
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள பூமிநீளா பெருந்தேவி நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 13ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா வரும், 25ம் தேதி துவங்குகிறது.விழாவையொட்டி, தினந்தோறும் மாலை, 6:00 மணியளவில் கரிவரதராஜ பெருமாள் அன்னவாகனம், சிம்மவாகனம், முத்துப்பந்தல், அனுமந்த வாகனம், கருடவாகனம், குதிரை வாகனம், சேஷ வாகனம் முத்துப்பல்லக்கு ஆகியவற்றில் சிறப்பு அலங்காரத்தில், நகரின் முக்கிய வீதிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவில், பஜனை கோஷ்டியினர், ஆண்டாள் கோஷ்டியினர், பாலர் கோஷ்டியினர் பிருந்தாவன நாட்டியங்களுடன் வலம் வந்து, இறைவனை வணங்குகின்றனர். முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை, வரும், 29ல் நடக்கிறது. விழாவில் வைரமுடி சேவை, திருக்கல்யாண உற்வசம், இரா உற்சவம், திருமங்கையாழ்வார் உற்சவம், தெப்பத்தேர் ஆகியனவும் நடக்கிறது. ஏப்ரல் 3ம் தேதி சாற்றுமுறை, தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது. விழாவின் பத்துநாட்களும் மதியம், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணிவரை திவ்ய பிரபந்த சேவாகாலம் நடக்கிறது.