Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தரவு இட்டதற்கு நன்றி இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடவுளுக்கு உண்மையாய் இருங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2018
03:03

“நீ விசுவாசமும் மனசாட்சியும்  உடையவனாயிரு! இந்த  நன்மனச்சாட்சியை சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்,” என்ற பைபிள் வசனத்தை, திரும்பத் திரும்ப ஒருவர் தன் மனதுக்குள் சொல்லிய படியே வந்து கொண்டிருந்தார். வழியில், ரயில் பாதையைக் கடக்க மேலே இருந்த பாலத்தில் ஏறினார். அந்த ஸ்டேஷன் மூலையில், பழைய ரயில் பெட்டிகள் உடைந்து கிடப்பதைப் பார்த்தார். “இந்த பெட்டிகள் புதிதாக இருந்த போது எத்தனை பேரை ஏற்றி எத்தனை ஊர்களுக்கு போயிருக்கிறது... அன்று ஓடிக்கொண்டிருந்த இந்த பெட்டிகள் இன்று ஆகாதவைகளாய் போய்விட்டதே!” என்று அவருக்கு வருத்தம்.  அப்போது கர்த்தர் அவர் முன் தோன்றி, “மகனே! இந்த ரயில் பெட்டிகள் உபயோகப் படாமல் போனது போல, நிறைய மக்களும் இன்று பயன்படாமல் போய் விட்டனர். அவர்களை நான் நல்லபடியாகத்தான் பூமிக்கு அனுப்பினேன்.  இப்போதோ, தடம் புரண்டு போன இந்த ரயில் பெட்டிகளைப் போல பயனற்றுப் போயினர். சிலரை பணம் வீழ்த்தியது. வேறு  சிலரை ஆசைகள் வீழ்த்தின. இன்று புறக்கணிக்கப்பட்ட நிலையில் தேவநாமத்திற்கு இழுக்காக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள்,” என்றார்.

உடனே பரவசம் கொண்ட பக்தர், “ஆண்டவரே! கடைசி மூச்சு வரை உமக்காக ஓடிக்கொண்டே இருக்க உதவி செய்யும். என்னைக் காத்துக் கொள்ளும்.  உம் வழிகளிலே உத்தமமாய் ஓட அனுக்கிரகம் செய்யும்,” என பிரார்த்தித்தார். தேவ பிள்ளைகளான நாம், நம் மனசாட்சியை சேதப்படுத்தாமல், கர்த்தருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவர் நமது பாவங்களை களைய, சிந்திய  ரத்தத்திற்கு விசுவாசத்தைக் காட்ட வேண்டும். உயிர்த்துடிப்பு இருக்கும் வரை உன்னதமான கடவுளுக்காக உண்மையும், உத்தமுமாய் உழைக்க வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar