பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
03:04
கிருஷ்ணராயபுரம்: மேட்டுத்திருகாம்புலியூர் வாய்க்கால் கரையில், புதிய சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருக்காம்புலியூர் பஞ்., மேட்டுத்திருக்காம்புலியூர் கட்டளை மேட்டுவாய்க்கால் கரையில், கடந்த, 13ல் பிரதோஷ வழிபாடு நடத்து. அப்போது, கரையை ஒட்டிய பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்த இடத்தில், சிறுவர்கள் கீழே இறங்கி விளையாடினர். அப்போது, அங்கு நான்கடி உயர சிவலிங்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதை மீட்ட அப்பகுதி மக்கள், நேற்று பிரதிஷ்டை செய்து, வழிபட்டனர். இது குறித்து கோவில் பூசாரி சரவணன் கூறியதாவது: கடந்த ஆண்டு, மேட்டு வாய்க்கால் கரையில் புதிய நந்தி மற்றும் சிறிய அளவிலான சிவன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பிரதோஷம் அன்று, நந்திக்கு பூஜை செய்யும் போது, மாலை நேரத்தில் சிறுவர்கள் தன்னிச்சையாக இந்த சிவலிங்கத்தை கண்டு பிடித்தனர். இன்னும் பல சிலைகள் இப்பகுதியில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, தொல்லியல் துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.