‘பொறாமை கொள்வது பெரும்குற்றம்’ என்று சொல்லும் நாயகம், சில நேரத்தில் பொறாமை கொள்ளவும் சொல்கிறார். ‘இரண்டு விஷயங்களில் மட்டும் பொறாமை கொள்வது ஏற்கக் கூடியது. தனக்குத் தெரிந்ததை பிறருக்கு கற்றுக்கொடுக்கும் மனிதனைப் பார்த்து பொறாமைப்படுவது. இறைவன் கொடுத்த செல்வத்தினால் ஒரு மனிதனின் வறுமையை நீக்குபவரை பார்த்து பொறாமைப்படுவது’ என்கிறார்.