* மனதை சமநிலையில் வைத்துக் கொள். பேசும் முன் இருமுறை யோசி. செயலை செய்யும் முன் மூன்று முறை யோசி. எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஊக்கமாகவும் இரு. பிறருக்கு கொடுப்பதால் இதயத்தை மேம்படுத்து. ஏராளமாக தர்மம் செய். * ஒவ்வொரு முகத்திலும் கடவுளைப் பார். * பிறர் செய்த தீங்கை மன்னித்து விடு அல்லது மறந்து விடு. பகைவனுக்கும் நன்மை செய். மலையளவு துன்பம் வந்தாலும் சகித்துக் கொள். * உனது பலவீனம், தவறு, தப்புகளை திருத்திக் கொள். உலகிற்கு நன்மை செய்வதற்காக மனதில் எழும் ஆசை, கோபம், அகந்தை ஆகியவற்றை விலக்கு. * அமைதியும், துணிவும் கொண்டு தடைகளை எதிர்த்து நில். நீ சரியான வழியில் செல்லும் போது வரும் குறுக்கீடுகளைப் பொருட்படுத்தாதே. * முகஸ்துதி பேச்சுக்கு மயங்காதே. உனது குற்றங்களை நேர்மையாக ஒத்துக்கொள். * உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள். அன்றாடம் யோகாசனம், உடற்பயிற்சி செய்ய மறக்காதே. * யாராவது உன்னை அவமதித்தாலும் கோபம் கொள்ளாதே. அது வெறும் சொற்களே என்று தள்ளிவிடு. * லட்சியத்தை நோக்கி நிதானமாக வாழ்வில் முன்னேறு. கடவுளைத் தவிர வேறு யாரிடமும் நட்பு கொள்ளாதே. - சொல்கிறார் சிவானந்தர்