பதிவு செய்த நாள்
14
ஜூன்
2018
11:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தீர்த்தங்கள் இடமாற்றம் செய்ய 6 புதிய தீர்த்த கிணறுகள் கட்டுமான பணி நிறைவு பெற்றது.
ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்கள் நீராட தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், கோயிலுக்குள் குறுகிய பாதையில் அமைந்துள்ள 1 முதல் 6 வரையிலான (மகாலெட்சுமி, சாவித்திரி, காயத்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கர தீர்த்தங்கள்) தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடும் போது, அவதிபட்டனர். இக்கூட்ட நெரிசலை தவிர்க்க, 6 தீர்த்த கிணறுகளை மூடி விட்டு இதற்கு பதிலாக கோயில் 2ம் பிரகாரம் வடக்கில் ரூபாய் 29 லட்சம் செலவில் கடந்தாண்டு அக்.,ல் பூமி பூஜையுடன் புதிய தீர்த்த கிணறு தோண்டும் பணி துவங்கியது. தற்போது தீர்த்த கிணறுகள் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர சில பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் ஆய்வு செய்தார். இந்நிலையில் வரும் ஆக.,ல் புதிய தீர்த்த கிணறுக்கு கோயில் குருக்கள் பிரதிஷ்டை செய்ய உள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம் பக்தர்கள் சிரமம் இன்றி 22 தீர்த்தங்களில் நீராட முடியும்.